பதிவு செய்த நாள்
10
டிச
2019
03:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் மூலவர் வீரட்டானேஸ்வரர், சிவானந்தவல்லிக்கு அபிஷேகம், அலங்காரம், பரணி தீபம் ஏற்றப்பட்டு, ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரன பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம், பஞ்சமூர்த்திகளுக்கு அர்ச்சனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.