திருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2019 06:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மீது இன்று மாலை 6:15 மணிக்கு திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகையையொட்டி பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. சுவாமி, தெய்வானை ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெற்ற நவரத்தின செங்கோல், சுவாமி பிரதிநிதி நம்பியார் சிவாச்சார்யாரிடம் வழங்கப்பட்டது. தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்து சுவாமி கிரீடத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டு, கரங்களில் செங்கோல், சேவல், மயில்கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன. இரவு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். விழாவையொட்டி இன்று காலை 10:15 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. மாலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொது மக்கள் மலைக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.