ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்நடந்தது. விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்றது. முக்கியநிகழ்ச்சியான நேற்று திருக்கல்யாணம் நடந்தது.இதற்காக காலையில் ஸ்ரீமஹாலட்சுமி,ஸ்ரீசுதர்சன, ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஹோமம்,ஸ்ரீதன்வந்திரி ஹோமங்களுடன் திருக்கல்யாண கோலம் பூண்ட ஸ்ரீ வேட்டைவெங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதிதாயாருக்கு வேத விற்பன்னர்கள் மந்திரம், மேளம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருமஞ்சன பிரசாதம், அன்னதானம்வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் முரளி வெங்கட்ராமன், சுந்தர்ராஜன்,சவுந்தர்ராஜன் செய்திருந்தனர்.