பதிவு செய்த நாள்
13
டிச
2019
12:12
புதுச்சேரி: அனுமன் ஜெயந்தி விழா, வரும் 25ம் தேதி, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திண்டிவனம் - புதுச் சேரி மெயின் ரோட்டில் உள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண் டாடப்படும்.
இந்த ஆண்டு வரும் 25ம் தேதி, அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுமன் ஜெயந்தி உற்சவம் ஆரம்பம், பகவத் ப்ராத்தனை, அனுக்ஞை, மஹாஸங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. வரும் 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு யஜமான ஸங்கல்பம், கும்பஸ்தாபனம், அக்னி மதனம், சாற்று முறை லட்சார்ச்சனை, மாலை 5:00 மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. வரும் 23ம் தேதி, காலை 7:00 மணிக்கு பஞ்சஸூக்தேஹோமம், மூலமந்த்ர ஹோமம், மாலை 5:00 மணிக்கு சாற்றுமுறை லட்சார்ச்சனை, 24ம் தேதி பஞ்சஸூக்த ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது.வரும் 25ம் தேதி ஸ்ரீ அனுமன் ஜெயந்தி தினத்தன்று, காலை 8.30 மணிக்கு, மூலவர் ஆஞ்ஜநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் ஆஞ்ஜநேயர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.பக்தர்களுக்கு காலை 10:00 மணி முதல், சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 4:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.