ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பவுர்ணமி வழிபாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணி முதல் வனத்துறை அலுவலர்களின் சோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். ஓடைகளில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் சென்ற நிலையிலும் பக்தர்கள் குளித்து விட்டு கோயிலுக்கு மலையேறினர். சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயிலில் பவுர்ணமி பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர். கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத் தலைமையில் அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.வனசரகர் கோவிந்தன் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.