நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை யொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமி விழா நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் 11ம் தேதி மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, முருகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் கோவிலின் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து சுவாமியை வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, கோவில் மலையின் கீழ் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.8:30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங் காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங் காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.