பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவி லில் பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ் வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மாலை 5:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் தங்க நாக பரண கவசத்தில் சிறப்பு அலங் காரத்திலும், மூலவர் அம்பாள் பெரியநாயகி வெள்ளி கவசத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்குமாட வீதியை 16 முறை வலம் வரும் நிகழ் ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து, 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 11:00 மணிக்கு மூலவர் சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.