பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில், வரும், 16ல், மழை வேண்டி, ஏகாதச ருத்ர பாராயண யாகம், சிறப்பு பூஜை நடக்கவுள்ளது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், கார்த்திகை மூன்றாவது திங்களில், 1,008 சங்காபி ?ஷகம் நடத்தபடும். அதன்படி, கடந்த, 2ல் நடந்தது.
அதேபோல், கார்த்திகையில் ஐந்தாவது திங்கள் வரும்போது, பூமி எங்கும் மழை பொழிந்து, மக்கள் பசி, பஞ்சமின்றி வாழ, ஏகாதச ருத்ர பாராயணம் நடத்தப்படும். அதன்படி, வரும், 16 காலை, கோ பூஜையுடன், 11 கலசம் வைத்து, 121 முறை, ஏகாதச ருத்ர பாராயணத்துடன் சிறப்பு யாகம் செய்து, அதில் பூஜித்த புனிதநீரால், பெரியநாயகி அம்மன், கரபுரநாதருக்கு அபிஷேகம் செய்யப்படும். மதியம், சிறப்பு உபசார பூஜையுடன் ருத்ர பாராயணம் நிறைவடையும். இதில் பங்கேற்போருக்கு, சகல சவுபாக்கியம் கிட்டும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. இதற்கான ஏற்பாடுகளை, பாலசுப்ரமணிய ஈசான சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.