உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஜன.9ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
ஜன.1 காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஜன.9 காலை 8:00 மணிக்கு மரகத நடராஜருக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு களைதல் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. ஜன.10 அதிகாலை 5:30 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தனக் காப்பிடுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.