சிவகாசி: சிவகாசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன் கோயிலில் மாதாந்திர சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
காலையில் சுவாமிக்கு வேதபாராயணம், கணபதி ஹோமம், மஹா ருத்ர ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.