Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பு.புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில் ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை தங்க அங்கி புறப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2019
08:12

 சபரிமலை,சபரிமலையில் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது.


கார்த்திகை முதல் தேதி தொடங்கி 41  நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் சிலைக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை  காணிக்கையாக வழங்கினார். 450 பவுன் எடை கொண்ட இந்த அங்கி மண்டலபூஜைக்கு முதல் நாளிலும், மண்டலபூஜையன்றும் மூலவருக்கு அணிவிக்கப்படும்.பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா  பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில்  வடிவமைக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபடுவர். நாளை காலை 6:00மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன்  புறப்படுகிறது.நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 24-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் இந்த பவனி 26-ம் தேதி மதியம்  பம்பை வந்தடையும். சூரிய கிரகணத்தையொட்டி அன்று காலை 7:30 முதல் 11:30 வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். பம்பை கணபதி கோயில் அருகில் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி  மாலை மூன்று மணிக்கு சன்னிதானம் கொண்டு வரப்படும்.26 மாலை 6:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 27-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி  அணிவிக்கப்பட்டிருக்கும்.27 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும்  நடைபெறாது. 31 அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் நடை பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar