பதிவு செய்த நாள்
23
டிச
2019
02:12
சென்னிமலை: சென்னிமலை ஐயப்பா நகரில், ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும், மார்கழி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையில், பாலாபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி, 11வது ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று 22ம் தேதி நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பால் குடங்கள் சுமந்து, சென்னிமலையின் நான்கு ராஜவீதி களிலும் ஊர்வலமாக சென்று, மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், ஐயப்ப சுவாமி கோவிலுக்கு வந்தனர். சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங் காரம், ஆராதனை நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர். வரும், 29ல் மதியம், 2:00 மணிக்கு திருவிளக்கு, மாலை 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமியின் திருவுருவச்சிலை அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடக்கிறது.