பதிவு செய்த நாள்
23
டிச
2019
03:12
நாமக்கல்: மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பெண்கள், சிறுவர், சிறுமியர் கைகளில் திருவிளக்கு ஏந்தியபடி அதிகாலையில் கிரிவலம் சென்றனர்.
நாமக்கல் இந்து சமய பேரவை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத ஞாயிற்றுக் கிழமைகளில், திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி, பெண்கள், சிறுவர், சிறுமையர் கைகளில் திருவிளக்கை ஏந்தியபடி மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் வருவர். 49வது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5:00 மணியளவில் அரங்கநாதர் கோவிலில் இருந்து கிரிவலம் துவங்கியது. அதன்பின், பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், நேதாஜி சிலை, பலப்பட்டரை மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் அரங்கநாதர் கோவிலை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில், 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து பேரவை நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 49ஆவது ஆண்டாக எங்களுடைய கிரிவல நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை, 5:00 மணிக்கு பெண்கள், சிறுவர், சிறுமியர் விளக்கு களுடன் வந்து பங்கேற்பர். கிரிவலத்திற்கு பின், அரங்கநாதர் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, பாசுரம் உள்ளிட்டவை பாடப்பட்ட பின், 7:15 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.