Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நரசிங்கபுரம் நரசிம்மர் கோவிலில் ... ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி புறப்பாடு ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் வைகுண்ட ஏகாதசி விழா: டிச.27ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் வைகுண்ட ஏகாதசி விழா: டிச.27ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 டிச
2019
10:12

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திரு அத்யயன உற்ஸவம் (வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்ஸவம்) டிச.27 ல் துவங்குகிறது. ஜன.6 ல் சொர்க்கவாசல் திறப்பு, ராப்பத்து உற்ஸவம் துவக்கம், ஜன.8 முதல் ஜன.15 வரை மார்கழி எண்ணெய் காப்பு திருவிழாக்கள் நடக்க உள்ளன.

டிச.27 முதல் துவங்கி ஜன.5 வரை நடக்க உள்ள பகல்பத்து உற்ஸவத்தின் முதல் நாளில் மாலை 5:00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பச்சைபரத்தல் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர்சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரியபெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

சொர்க்கவாசல் திறப்பு: முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஜன.6 நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர்.அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம் நடக்கிறது. அன்று முதல் ஜன.,16 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி பெரியபெருமாள் சன்னதியில் எழுந்தருள்வார். அங்கு திருவாராதனம், அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், சேவாகாலம் என மறுநாள்அதிகாலை 5:30 மணி வரை ராப்பத்து உற்ஸவங்கள் நடக்கிறது.

எண்ணெய்காப்பு உற்ஸவம்: ஜன.8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆண்டாள் எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். பகல் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு சேவை நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோ தலைமையில் கோயில் பட்டர்கள் அலுவலர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar