பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
10:04
இன்று செவ்வாய், உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ரோகிணி நட்சத்திரத்துடன் அட்சய திரிதியை சேர்ந்து வருவதால் இன்று பொருள்கள் வாங்கினால் பன்மடங்கு பலன் கிடைக்கும்.
மதுரை தங்கமயில் ஜூவல்லரி நிர்வாகி: இன்று(ஏப்.,24) அட்சய திரிதியை முன்னிட்டு, அனைத்து நகை கடைகளும் சலுகைகளையும், பரிசுகளையும் அறிவித்துள்ளன. இந்தாண்டு ரோகிணி நட்சத்திரத்துடன் அட்சய திரிதியை வருவதால், இன்று தங்கம் வாங்கினால் பன்மடங்கு பலன் கிடைக்கும், என்கிறார், மதுரை தங்கமயில் ஜூவல்லரி நிர்வாகி ரமேஷ். எந்த நகைகளை வாங்கலாம், பொதுமக்கள் எதில் ஆர்வமாக உள்ளனர் என்பது குறித்து அவர் கூறியதாவது: கல் நகைகளைவிட, கையால் தயாரிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். கல் நகைகள் வாங்கும்போது, ஆய்வு செய்து வாங்க வேண்டும். கல் நகைகளை வாங்குவதற்கு பதில் தங்க நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். காரணம், பின்னாளில் கல் நகைகளை விற்கும்போது, தங்க நகையைவிட மதிப்பு குறைவாக இருக்கும். தங்க நகைகளில் காஸ்டிம், பியூசன், பிளைன் கோல்டு நகைகளை அதிகளவில் மக்கள் விரும்புகின்றனர். கடந்தாண்டு ஏப்ரலில் ஒரு கிராம் ரூ.1980க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.2700க்கு விற்கப்படுகிறது. தங்க நகையை வாங்கியபோது இருந்தவிலை, தற்போது அதை விற்கும்போது, கூடுதலாக இருப்பதால் நகைகளை மாற்றி, புதிய நகைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோல், வெள்ளி பொருட்களை மாற்றுவதிலும் ஆர்வமாக உள்ளனர், என்றார்.