பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
11:04
சென்னை: ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், நேற்று, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அலுவலகத்தில், ஏராளமானோர் வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கியும், பூர்த்தி செய்தும் கொடுத்து வருகின்றனர். ஹஜ் பயணத்திற்காக நாடு முழுவதும் மொத்தம், 28 மையங்களில் இருந்து செப்., 19ம் தேதி முதல் அக்., 20ம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து ஹஜ் கமிட்டி அலுவலர் ஒருவர் கூறியதாவது: விண்ணப்பங்கள் நாளை மாலை 5 மணி வரை பெறப்படும். இன்னும் ஓரிரு வாரங்களில் குலுக்கல் நடைபெறவுள்ளது. குலுக்கல் முடிந்ததும், தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரம் தெரிந்து விடும். அவர்கள், மே 31ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அலுவலகம், "ரோஸி டவர் 3வது மாடி, எண்:13 மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டரியலாம்.