திருப்பூர்:திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், மகரஜோதி பக்தர்கள் குழு சார்பில், 24ம் ஆண்டு அன்னதான விழா, 23ல் துவங்கியது. அதிகாலை, கணபதி ஹோமம் நடந்தது. 24ம் தேதி காலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜை, இரவு 7:00 மணிக்கு, ஐயப்பன் மகா கன்னிசாமி பூஜை, கலசபூஜை, தீபாராதனை, பஜனை நடைபெறும். நாளை மறுநாள் 25ம் தேதி, காலை 9:00 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு அன்னதான பூஜை நடக்கிறது. காலை 11:00 மணி முதல் அன்னதானம் நடைபெறும். இதை யொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகி்ன்றன.