நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கோவில்களில் பிரதோஷ பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர், சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று 23ல் பிரதோஷ பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு மதியம் 4:00 மணிக்கு விநாயகர், நந்தி, பிரதோஷ நாயகர், ஈஸ்வரர், அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.