பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
12:04
போடி:போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடந்தது. நேற்று இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வந்தார். இன்று இரவு மீண்டும் மலைக்கோயில் சென்றடைகிறார்.விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தக்கார் சுரேஷ்,விழா கமிட்டி தலைவர் வடமலை ராஜய பாண்டியன் முன்னிலை வகித்தனர். இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத், சுப்பிரமணியசுவாமி கோயில் சிறப்பு ஆலோசகர் விஜயபிரதீப், நகராட்சி தலைவர் பழனிராஜ், பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை செயலாளர்கள் கதிரேசன், பேச்சிமுத்து, முத்துராமலிங்கம், பொருளாளர்கள் ஜெயபால், குணசேகரன், துணைச்செயலாளர்கள் பழனிமுருகன், ராஜாராம் பங்கேற்றனர். நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், சந்தியா டிராவல்ஸ் உரிமையாளர் சம்பத், வர்த்தகர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் தனசேகரன், இணை செயலாளர் வேல்முருகன், பொரு ளாளர் அய்யனார், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன், ராயல் சிட்டி எண்டர் பிரைசஸ் உரிமையாளர் பாண்டியராஜ், அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள் விஸ்வநாதபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.