மானாமதுரையில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2012 12:04
மானாமதுரை:மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இந்த வருடம் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடைபெறுவதால் 2ம்தேதி 11.15 மணியிலிருந்து 11.45 மணிக்குள் நடைபெற உள்ளது.3ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆற்றில் அழகர் இறங்கும் விழா 6ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதிராமன், மேலாளர் இளங்கோ,ஸ்தானீகர் அழகிய சுந்தரபட்டர் செய்து வருகின்றனர்.