பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
12:04
மோகனூர்: மோகனூர் அடுத்த மணப்பள்ளியில், முனியப்பன் கோவிலில் உள்ள ராஜகணபதி, செல்வ கணபதி கொங்கலப்பன் புக்கராண்டி நவக்கிரகங்கள், முனியப்பன் மற்றும் தோரண வாயில் கும்பாபிஷேக விழா, மார்ச் 4ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, 47 நாட்கள் மண்டல பூஜை நடந்தது.தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். தொடர்ந்து, 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா, கோலாகலமாக நடந்தது. அன்று காலை 8 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.இரவு 7 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு வாண வேடிக்கை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.