பெண்ணாடம்: பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.இதையொட்டி, நேற்று 25ம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமாதேவி சமேத வேதநாராயண பெருமாள் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
காலை 6:15 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வேதநாராயண பெருமாள் சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வரதராஜ பெருமாள் சுவாமிக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.