திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2019 03:12
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று 25ம் தேதி மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்க மன்னர் அலங்காரத்தில், ஆண்டாள் வைத்திருந்த கிளி, மாலையுடன் வரவழைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ராமபக்த அனுமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதியம் 1:00 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்தசேவையும் நடந்தது.