பதிவு செய்த நாள்
26
டிச
2019
03:12
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
இம்மாத அமாவாசை நேற்று 25ம் தேதி காலை, 11:52 மணிக்கு துவங்கி இன்று, 26ம் தேதி காலை, 11:21 மணி வரையில் நீடிக்கிறது.அமாவாசையை முன்னிட்டு நேற்று, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை, 6:30 மணிக்கு, முதல் கால பூஜை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது.கோவிலுக்கு பின்னுள்ள உப்பாறு ஆற்றுப்படுகை யில், பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இரவு முழுவதும் கோவில் நடை திறந்தி ருந்தது. இன்று, 26ம் தேதி சூரிய கிரகணம் என்பதால், காலை, 7:30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு, மதியம், 12:00 மணிக்கு திறக்கப்படும்.