கருமத்தம்பட்டி ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2019 03:12
கருமத்தம்பட்டி: சூலுார் அடுத்த கரவழி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பல நுாறு ஆண்டுகள் பழமையானது. இங்கு, நேற்று 25ல், அனுமன் ஜெயந்தி விழா மற்றும் மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.
காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம், தன்வந்திரி சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேக, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேய சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆன்மிக எழுத்தாளர் ராஜகோபாலன், கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, பாண்டுரங்கன், கரிய மாணிக்கபெருமாள் மற்றும் ஸ்ரீனிவாசபெருமாள் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், கரவழி மாதப்பூர் அம்மன் ஒயிலாட்ட கலைக்குழுவின் வள்ளி கும்மியும், அச்சம்பாளையம் சண்முகத்தின் நாம சங்கீர்த்தனமும் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.