ஷீரடி:மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில், கடந்த மாதம் 23ல் இருந்து, கடந்த 2 வரை, 8.23 லட்சம் பேர், தரிசனம் செய்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி, கடந்த 11 நாட்களில், 17.42 கோடி ரூபாய், கோவிலில் காணிக்கை வசூல் ஆனதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.