Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் ... வைகுண்ட ஏகாதசி: திருமலையில் பக்தர் கூட்டம் வைகுண்ட ஏகாதசி: திருமலையில் பக்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மிக அபூர்வம்: ஜன.,14ல் நடை அடைப்பு இல்லை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மிக அபூர்வம்: ஜன.,14ல் நடை அடைப்பு இல்லை

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
10:01

சபரிமலை : சபரிமலையில் மிக அபூர்வ சம்பவமாக ஜன.14ம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை. மறு நாள் அதிகாலை மகர சங்கரமபூஜைக்கு பின்னர் அதிகாலை 2:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும். பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இந்த ஆண்டு சூரியன் மகரராசிக்கு ஜன.15 அதிகாலை 2:09 மணிக்கு கடக்கிறது. இதனால் ஜன.14 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஜன.15 அதிகாலை 1:45 மணிக்கு மகர சங்கரம பூஜைக்கான ஆயத்தங்கள் துவங்கும். 2:09 மணிக்கு இந்த பூஜை நடந்த பின்னர் 2:30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

ஜன.15 அதிகாலை 3:00 மணிக்கு பதிலாக 4:00 மணிக்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு பின்னர் திருவாபரணங்கள் வந்து தீபாராதனை முடிந்த பின்னர் தான் பக்தர்கள் படியேற முடியும். ஒரு நாள் திறக்கப்பட்ட நடை அன்று அடைக்கப்படாமல் அடுத்த நாள் அதிகாலை வரை திறந்திருப்பது சபரிமலையில் மிக அபூர்வமானது என பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar