பதிவு செய்த நாள்
06
ஜன
2020
11:01
தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு வைபவத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தியாகதுருகம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.
அதைத்தொடர்ந்து 5:00 மணிக்கு பரமபத வாசல் வழியே சர்வ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, துணைத்தலைவர் ரங்கராஜூ, பிச்சாண்டி பிள்ளை, நல்லா பிள்ளை, அபரஞ்சி செட்டியார், அரங்க வேல்முருகன், மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம் சுந்தர், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் விஜயராஜூ, பாசறை செயலாளர் கிருஷ்ணராஜ், சஷ்டி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் வேல்நம்பி, தனமூர்த்தி ஐ.டி.ஐ., தாளாளர் பழனிவேல், வேலு எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் சிவக்குமார், தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் கோவிமுருகன், நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.