வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக, நாளை (ஜன.8) முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஜன.8ம் தேதி காலை 6:00 மணி முதல், ஜன.11 பகல் 2:00 மணி வரை மலையேற அறநிலையத்துறை, வனத்துறை சார்பில் அனுமதி வழங்கபட்டுள்ளது. பாலிதீன் பைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.