ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவம் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 10:20 மணிக்கு தங்கபல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பட்ட ஆண்டாள் மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருளினார்.
அங்கு திருவடி விளக்கம், அரையர்சேவை, தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்தது. அங்கிருந்து புறப்பட்ட ஆண்டாள் திருமுக்குளம் எண்ணெய்காப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு உற்ஸவம், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு ஆண்டாள் துளசி வாகனத்தில் ரதவீதி வழியாக வந்து கோயிலுக்கு வந்தடைந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜன.15 அன்று மணவாளமாமுனிகள் மங்களாசாசனம், ஜன.16 அன்று கனு வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்து வருகின்றனர்.