காரியாபட்டி: காரியாபட்டி கே.நெடுங்குளம் பணிக்கனேந்தல் காளியம்மன் கோயிலில் 7 நாள் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து சென்று ஊரணியில் கரைத்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.