தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேன் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.