பதிவு செய்த நாள்
13
ஜன
2020
05:01
மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே போல புதன் ஜன.28ல் கும்ப ராசிக்கு மாறுகிறார். இவ்வாறு மாறினாலும் தொடர்ந்து நற்பலன் தருவார். சுக்கிரன் பிப்.4 வரை 11ம் இடத்தில் இருப்பது உங்களுக்கு சாதகபலன் தான் கிடைக்கும். அதன் பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை காரணம் குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். இது வரை இருந்த தடைகள் அடியோடு மறையும். நினைத்தது நிறைவேறும். பெண்களால் பெரிதும் முன்னேற்றம் காண்பீர்கள். அவர்களால் பொன், பொருள் சேரும்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வீட்டில் மகிழ்ச்சியும்
குதூகலமும் குடி கொண்டிருக்கும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் மனம் திருந்தி உங்களிடம் சரணடைவர். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். சொந்தபந்தம் வருகை இருக்கும். அவர்களால் நன்மை அடைவீர்கள்.
பெண்கள் குதூகலமான பலன் காண்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும் விருந்து, விழா என சென்று வருவீர்கள். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். வேலை பார்க்கும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகளுக்கு வழக்கத்தை விட லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.
*ஐ.டி.,துறையினர் உங்கள் திறமை பளிச்சிடும்.மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
*மருத்துவர்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு எதிர்பாராத நற்பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
*ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை.
* அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.
* கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று பொருளாதார வளம் காண்பர்.
* விவசாயிகள் பாசிப்பயறு, நெல், கோதுமை, உளுந்து, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
* பள்ளி மாணவர்கள் போட்டி, பந்தயங்ளில் வெற்றி காண்பர். ஆசிரியர்கள் ஆலோசனையால் வளர்ச்சி காண்பர்.
* கல்லூரி மாணவர்கள் சிறப்பான பலன் காண்பர். தீய நட்பால் படிப்பை பாழாக்கியவர்கள் அதில் இருந்து விடுபடுவர்.
சுமாரான பலன்கள்
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிவோருக்கு செல்வாக்கு பாதிக்கப்படலாம். பொறுமை யுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் அலைச்சல், பளு இருக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் ஏற்படலாம். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.
* கலைஞர்களுக்கு பிப்.9க்கு பிறகு முயற்சியில் தடை. பண நஷ்டம் ஏற்படலாம்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க நேரிடும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.
பரிகாரம்:
* செவ்வாயன்று முருகன் வழிபாடு
* சனியன்று அனுமனுக்கு துளசி அர்ச்சனை
* வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு நெய் தீபம்
* நல்ல நாள் ஜன.16,17,18,19,24,25,26,27,28 பிப்.1,2,6,7,12
* கவன நாள்: ஜன. 20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: சிவப்பு, மஞ்சள்