பதிவு செய்த நாள்
14
ஜன
2020
10:01
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வந்த பக்தர்கள், ஒரு கோடியே, 33 லட்சத்து, 42 ஆயிரத்து, 497 ரூபாயை, காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த, 10ல் மார்கழி மாத பவுர்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து, உண்டியல் காணிக்கை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது. இவற்றில், ஒரு கோடியே, 33 லட்சத்து, 42 ஆயிரத்து, 497 ரூபாய், 88 கிராம் தங்கம், 707 கிராம் வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.