ஒரு ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் சூரியன் இரு திசைகளில் பயணிப்பதாகச் சொல்வர். தை முதல் ஆனி வரை வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரை தென்திசையிலும் செல்கிறார். இதை உத்தராயணம், தட்சிணாயனம் எனச் சொல்வர். பூமியைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயணம் என்பது பகலாகவும், தட்சிணாயணம் என்பது இரவாகவும் இருக்கும். ஆறு மாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளான தை முதல் நாளே தைப்பொங்கல். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு சுகமாக அமையும்.