ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பொங்கலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். பொங்கலை முன்னிட்டு மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதேபோல், கோவில் சன்னதியில் உள்ள அம்மன் சிலைகளுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் காலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடந்தது.