Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

19 ஜன
2020
07:01

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்க்கு மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

தட்சணா பினாகினி என போற்றப்படும் புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் தைத்திங்கள் முதல் நாளில் இருந்து 5 தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள தென்பெண்ணையில் சேர்கிறது என்பது ஐதீகம். சிறப்புவாய்ந்த தென்பெண்ணை நதியில் திருவண்ணாமலை அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதன்படி நேற்று திருவண்ணாமலையில் இருந்து பாதம் தாங்கிகளில் புறப்பட்டு இனறு மதியம் 12:00 மணிக்கு மணலூர்பேட்டை வந்தடைந்தார்.

விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அருணாச்சலேஸ்வரரை எதிர்கொண்டு தென்பெண்ணைக்கு அழைத்துச் சென்று தீர்த்தவாரி வைபவம் நடந்தது. வசந்த பந்தலில் அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி மண்டகப்படி, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு தென்பெண்ணையில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரும், விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar