பதிவு செய்த நாள்
19
ஜன
2020
08:01
பழநி:பழநியில், பிப்., 2ம் தேதி, தைசப்பூச விழா துவங்குகிறது. பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா, திண்டுக்கல் மாவட்டம் பழநி, பெரியநாயகியம்மன் கோவிலில், பிப்., 2ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.பிப்., 2ம் தேதி காலை, 10:30 மணிக்குள் கொடியேற்றம், மலைக்கோவிலில் காப்பு கட்டுதல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, பிப்., 7ம் தேதி இரவு, 7:30 மணிக்கு மேல், திருக்கல்யாணம்; பிப்., 8ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.அனைத்து நாட்களிலும் வள்ளி - தெய்வானையுடன், முத்துக்குமார சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இறுதி நாளான, பிப்., 11ம் தேதி இரவு, 11:00 மணிக்கு மேல், கொடி இறக்குதலுடன், தைப்பூசத் திருவிழா நிறைவு பெறும்.