Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மகரஜோதிக்கு பக்தர்கள் ... பிறந்தது கார்த்திகை .. சபரிமலை நடை திறப்பு: கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி பிறந்தது கார்த்திகை .. சபரிமலை நடை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: சரங்குத்தியில் எழுந்தருளிய அய்யப்பன்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: சரங்குத்தியில் எழுந்தருளிய அய்யப்பன்

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
10:01

சபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம், நேற்று காலை நிறைவு பெற்றது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் வந்த பக்தர்களை வழியனுப்பும் வகையில், அய்யப்பன் நேற்று இரவு, சரங்குத்தியில் எழுந்தருளினார்.

சபரிமலையில், மண்டல,- மகரவிளக்கு காலத்தில், 60 நாட்களாக நடந்த நெய்யபிஷேகம், நேற்று காலை, 10:30 மணிக்கு நிறைவு பெற்றது. தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு களபபூஜை நடத்தினார். பிரம்மகலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி எடுத்து, கோவிலை வலம் வந்தார். பின், சுவாமிக்கு களபம் அபிஷேகம் நடந்தது; தொடர்ந்து, உச்சபூஜை நடந்தது.நேற்று இரவு, 9:00 மணிக்கு, அய்யப்பன் சரங்குத்தியில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீப்பந்தம் அணைக்கப்பட்டு, மேளதாளம் நிறுத்தப்பட்டு, அய்யப்பன், மாளிகைப்புறம் கோவில் மணி மண்டபத்துக்கு எழுந்தருளினார். பக்தர்களை அனுப்பி, பூதகணங்களை அழைத்து வருவதாக நம்பப்படுகிறது.

இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள், நெய்யை கோவிலில் கொடுத்து, அபிஷேகம் செய்த நெய்யை, பிரசாதமாக பெற்று செல்லலாம்.இரவு, 10:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோவில் மணி மண்டபத்தில், குருதிபூஜை நடக்கிறது. அதன்பின், பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை காலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், 6:30 மணிக்கு, பந்தளம் மன்னர் பிரதிநிதி பிரதீப்குமார் வர்மா முன்னிலையில், கோவில் நடை அடைத்ததும், திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar