பதிவு செய்த நாள்
20
ஜன
2020
10:01
நாமக்கல்:தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபி ஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லில், வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறும். நேற்று, தை முதல் ஞாயிறை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் சாற்றப்பட்டது. பின்னர் பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், தேன், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.