பதிவு செய்த நாள்
20
ஜன
2020
02:01
சென்னை,: அதிக மதிப்பெண் பெற்று, தேர்வில் வெற்றி பெற, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான சிறப்பு ஹோமம், நேற்று, பெசன்ட் நகர் ரத்ன கிரீஸ்வரர் கோவிலில் நடந்தது.
பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டி, சிறப்பு ஹோமம் நடைபெறும்.இந்தாண்டுக்கான ஹோமம், நேற்று காலை நடந்தது. இதில், மாணவ - மாணவியரின் படிப்பு சிறப்பாக அமைய, ஸ்ரீ மேதா தக் ஷிணாமூர்த்தி ஹோமம் மற்றும் ஸ்ரீ ஹயக்ரீய ஹோமம் நடைபெற்றது.இந்த ஹோமத்தை, தலைசிறந்த வேத விற்பன்னர்கள் நடத்தினர். இதில், பெசன்ட்நகர், அடையாறு, திருவான்மியூர் சுற்றவட்டார பகுதிமக்கள், தங்கள் பிள்ளைகளுடன் பங்கேற்று வழிபட்டனர்.பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு, மூல மந்திர ஜபம் செய்யப்பட்ட, பேனா செட் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, ரத்னகிரீஸ்வரர் கோவிலின், பக்த மண்டலி நிர்வாகக்குழு முன்னின்று நடத்தியது.