• படித்தால் மட்டும் போதுமா...கடவுளின் திருவடிகளை வணங்காவிட்டால் படிப்பால் பயனில்லை. • பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் தவிர்ப்பது தர்மமாகும். தர்மத்தால் வாழ்வில் நல்ல நிலையை அடையலாம். . • நம்மால் முடிந்த தர்மச் செயல்களை செய்தால், வாழ்வில் உயர்வு உண்டாகும். • தர்மத்தால் வரும் இன்பம் நிலையானது. மற்ற வழிகளில் வரும் இன்பங்கள் நிலையற்றவை. • ஒருவன் தன் வாழ்நாளில் அறச்செயல்களில் ஈடுபட வேண்டும். மறந்தும் பழியை தரும் செயல்களில் ஈடுபடக் கூடாது. • மனிதனின் எண்ணமே செயலாகிறது. அந்தச் செயலே வாழ்வை தீர்மானிக்கிறது. • விருப்பும், வெறுப்பும் இல்லாத கடவுளின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் நேராது. • கடவுளின் திருவடிகளை சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடந்து மோட்சம் அடைகின்றனர். • பக்தியின் முக்கிய நோக்கம் மனிதனை தர்மத்தின் பாதையில் செல்லத் துாண்டுவதே. • பதவியும், பொருளும் புகழை உயர்த்தாது. ஒருவர் செய்த தர்மமே புகழை உயர்த்தும். • தர்ம வழியில் வாழ்பவர்களே ஞானிகள். கடவுளுக்கு நிகராக அவர்கள் மதிக்கப்படுவர். • அன்பும், தர்மமும் இணைந்தால் தான் குடும்ப வாழ்வே சிறக்கும். . • தானம், விருந்தோம்பல், நட்பு பாராட்டுதல் ஆகியவையே தர்மத்தின் பண்புகளாகும். * உழைப்பின் மூலம் உடலுக்கான (வாழ்வதற்கான) சம்பளம் கிடைககும். * பெற்ற தாயே பட்டினி கிடக்கும் சூழல் இருந்தாலும், மனிதன் தர்மத்தை மீறி நடப்பது கூடாது. * அன்பும், பண்பும் நிறைந்த மனைவி அமைந்து விட்டால் இல்லாதது ஏதுமில்லை. * வீட்டுக்கு வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று உபசரிப்பவர்களே நல்லவர்கள் - கேட்கிறார் திருவள்ளுவர்