சசிதரன் என்ற சிறுவன் பக்தி நிறைந்தவன். எப்போதும் சிவநாமத்தையே உச்சரித்து வந்தான். அவனின் தாய், தந்தையர் இறந்துவிடவே, தன் துக்கத்தைப் போக்க ஒவ்வொரு ஊராக தலயாத்திரை மேற்கொண்டான். திருவையாறு தலத்துக்கு வந்தபோது, ஒருநாள் இரவு அவன் கனவில் எமதர்மன் தோன்றி, "உன் ஆயுள் இன்னும் ஐந்து நாட்களில் பறிக்கப்படும் என்று கூறினான். விடியற்காலையிலேயே கோயிலுக்குச் சென்று சிவமந்திரங்களை ஜபித்தான். தன்னை எமனிடமிருந்து மீட்கும்படி வேண்டினான். சிவபிரான் அவனது ஆராதனையில் மகிழ்ந்து, தனது துவாரபாலகர்களை ஏவி, எமனை வீழ்த்தி சிறுவன் சசிதரனைக் காப் பாற்றும்படி உத்தரவிட்டார். உரிய நேரம் வர, சிறுவனின் உயிரைப் பறிக்க வந்தான் எமன். சிவபெருமானின் கட்டளைப்படி துவாரபாலகர்கள் எமனை வீழ்த்தி சிறுவனைக் காப்பாற்றினர். சிவபெருமான் சிறுவனுக்குக் காட்சி அளித்ததுடன் "இந்தத் தலத்தில் என்னை வழிபடுபவர்களை எமதர்மன் நெருங்க மாட்டான் என்று கூறி மறைந்தார். எம பயம் தீர்த்த சுந்தரமூர்த்தியே "ஆட்கொண்டேசப் பெருமான் என்று பெயர் பெற்றார். திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் உள்ள இவர் சன்னதியில் எப்போதும் குரங்குலியம் புகைந்துகொண்டே இருக்கும்.