பதிவு செய்த நாள்
22
ஜன
2020
10:01
சென்னை: தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகளை கண்காணிப்பதற்காக, தலைமை செயலர் சண்முகம் தலைமையில், உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது.
தஞ்சாவூரில் உள்ள, பெரிய கோவில் என அழைக்கப்படும், பிரஹதீஸ்வரர் கோவில் கும்பாபிகஷேம், 23 ஆண்டுகளுக்கு பின், பிப்ரவரி, 5ல் நடக்கவுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கும்பாபிஷேக ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பாரம்பரிய நிகழ்வை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்தவும், தலைமை செயலர் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அரசிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, கும்பாபிஷேக ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, தலைமை செயலர் சண்முகம் தலைமையில், 21 அதிகாரிகள் இடம் பெற்ற, உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பான அரசாணையை, ஹிந்து அறநிலையத் துறை கூடுதல் தலைமை செயலர் அசோக் டோங்ரே பிறப்பித்துள்ளார்.