Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டப்பா திருவிழா: குந்தா ... விவேகானந்தர் ரத யாத்திரை துவக்கம் விவேகானந்தர் ரத யாத்திரை துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு புதிய கொடிமரம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு புதிய கொடிமரம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
12:01

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, புதிய கொடி மரத்தை தயார் படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜசோழன் காலத்தில், நிறுவப்பட்ட கொடி மரம் அந்நியர்களின் படையெடுப்பின் போது சேதமடைந்தன. பின்னர் நாயக்க மன்னர்கள் காலத்தில் நந்தி மண்டபத்துக்கு முன்புறம் புதிய கொடி மரம் நிறுவப்பட்டதாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொடர்ந்து, மன்னர் இரண்டாம் சரபோஜியால், 1801ம் ஆண்டில், புதிய கருங்கல் பீடம் கட்டப்பட்டு, 1814ம் ஆண்டில், பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாகப் புதிய கொடி மரம் நிறுவப்பட்டன.  இக்கொடி மரமும் பழுதடைந்து விட்டதால் 2003, பிப். 7ம் தேதி, புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு, அதற்குக் கும்பாபிஷேக விழாவும் நடத்தப்பட்டது. இந்நிலையில், பிப். 5ம் தேதி, நடைபெறுள்ள கும்பாபிஷேகத்திற்காக, கொடி மரத்தில் இருந்த பித்தளை கவசங்களைப் புனரமைப்பு செய்வதற்காக, கடந்த ஜன. 2ம் தேதி கழற்றப்பட்டு, பாலீஷ் போடப்பட்டு வருகிறது. மேலும், புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பழைய கொடி மரம், 17 ஆண்டுகளுக்கு பிறகு, ஜன. 12ம் தேதி அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய கொடி மரம் அமைப்பதற்காக சென்னையிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 40 அடி உயர பர்மா தேக்கு வரவழைக்கப்பட்டு, கொடி மரத்தை செதுக்கும் பணியில், மதுரையை சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஸ்தபதி செல்வராஜ் கூறியதாவது;
இந்தப் புதிய கொடி மரத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் தலா நான்கரை அடி உயரத்திலும், ருத்ர பாகம் இருபத்தி எட்டரை அடியிலும் செய்யப்படவுள்ளது. ஏற்கெனவே இதன் மீதிருந்த செப்புக் கவசங்கள் இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்பட்டு, பாலீஷ் போடும் பணி முடிந்து ஒரு வாரத்தில் பீடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar