’வாசம் மிக்க மலர் மாலைகள் ஏராளம் இருக்க, விநாயகருக்கு ஏன் அருகம்புல் மாலை அணிவிக்கப்படுகிறது?’ என்ற எண்ணம் பலருக்கு எழலாம். ’அனலாசுரன்’ என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறித் தகித்து விடுவான். அவனைக் கண்டு அஞ்சிய பிரம்ம தேவனும், தேவேந்திரனும், சிவபெருமானைச் சந்தித்து முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரிடம், அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.
விநாயகர் பூத - கணங்களுடன் சென்று, அனலாசுரனுடன் போர் புரிந்தார். அனாலசுரன் பூத -கணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் பலமாக மோதினார். ஒரு கட்டத்தில் கோபமுற்ற விநாயகர், அனாலாசுரனை அப்படியே விழு ங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.
இதையடுத்து விநாயகருக்கு கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து, விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனாலசுரனும் வயி ற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.
அன்று முதல் தன்னை அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமெனவும், அரு கம்புல் மாலை சமர்ப்பித்து வழிபடுமாறும் விநாயகர் கூறினார். இந்த வழக்கம்தான் இன்றும் உள்ளது.