பதிவு செய்த நாள்
23
ஜன
2020
10:01
செங்கல்பட்டு:திம்மாவரத்தில், சுயம்பு சிவகாளியம்மன் கோவிலில், நேற்று, வளையல் திருவிழா நடைபெற்றது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரத்தில், புகழ்பெற்ற சுயம்பு சிவகாளியம்மன் கோவில் உள்ளது.இங்கு, ஆண்டுதோறும், தை மாதத்தில் நடக்கும் வளையல் திருவிழா, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு துவங்கி, மதியம், 2:30 மணி வரை நடைபெற்றது. பின், வளையல் அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளினார். கல்யாணம் ஆகாத, குழந்தை இல்லாத பெண்கள், அம்மனுக்கு வளையல்களை அணிவித்து, வேண்டினர். திம்மாவரத்தை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து, அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.