பதிவு செய்த நாள்
23
ஜன
2020
12:01
திருவாரூர்: விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் கோயிலில் நந்திதேவருக்கும், பதஞ்சலி மனோகரர் சுவாமிக்கும், தை மாத தேய்பிறை பிரதோஷம் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நேற்று நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நந்தியம் பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சந்திரசேகர சிவாச்சாரியார் பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.