Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிப்., 2ல் திருத்தணி முருகப்பெருமான் ... குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் டிச.27ல் தான் சனிப்பெயர்ச்சி குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் டிச.27ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
12:01

மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் மகரத்தலை நாள் குருபூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Default Image
Next News

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் அசுவதி குருபூஜை விழா தொடக்க நிகழ்ச்சியாக திருமாளிகை த்தேவர் உற்சவம் நடந்தது. நேற்று 23ம் தேதி காலை குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சன்னதி எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் அன்னக் கொடி ஏற்றி குருபூஜை விழா சிறப்பு மகா தீபாரதனையுடன் தொடங்கியது. இதில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாலை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி 2018 -19ம் ஆண்டில் தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், காரைக்குடி, சிதம்பரம், கீழ்வேளூர், உளுந்தூர்பேட்டை, கம்பம் மைய மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் வழங்கினார். தொடர்ந்து நடந்த சமய விரிவுரை நிகழ்ச்சியில் மகாலிங்கம் ஓதுவார் திருமுறை பாடினார். அம்பலவாணர் தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். சென்னை மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார், பி.எச்.எஸ் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் சிவாகமங்களில் முப்பொருள் இலக்கணம் எனும் தலைப்பிலும், ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய பேராசிரியர் ஜெயபால் மணியாடு பாவாய் காவாய் எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி உதவி த லைமை ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

இரவு நடைபெற்ற பூஜை நிறைவில் திருக்கோகர்ணம் இந்துசமய வார வழிபாட்டு மன்றத்தின் சைவத் தமிழ்ப் பணிகளை பாராட்டி அதன் பொறுப்பாளர் வெங்கடேசனுக்கு பொ ற்கிழி ரூ.5ஆயிரம் மற்றும் சைவசுடர் நிலையம் எனும் விருதினை குருமகாசன்னிதானம் வழங்கினார். இரவு அம்பலவாணர் அரங்கில் திருக்கடையூர் நிருத்யாலயா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சைவ சித்தாந்த பேராசிரியர்கள், மாணவர்கள், ஆதீன புலவர்கள், தமிழாசிரியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar