பதிவு செய்த நாள்
28
ஏப்
2012
10:04
திருநெல்வேலி:தச்சநல்லூர் சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (28ம்தேதி) நடக்கிறது. தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் (சிவன் கோயில்) வருஷாபிஷேகம், சித்திரை திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். 8ம்திருநாளான நேற்று காலை நடராஜர் வெள்ளை, பச்சை சாத்தி வீதியுலா, மாலையில் கங்காளநாதர் வீதியுலா, இரவு சுவாமி, அம்பாள் தேர் கடாட்சம் நடந்தது.
வருஷாபிஷேகம்: 9ம்திருநாளான இன்று காலை 6.45 மணிக்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளுகின்றனர். 10.40 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. நாளை தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் முருகன், உலகம்மன் பக்த சேவா குழு, பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.